Saturday, February 25, 2006

முதல் வசந்தம்...



முதல் வசந்தம்...
--------------------

கோட்டான்களும் , கழுகுகளும் மட்டுமே
வந்து வந்து போன
எனது வாழ்க்கைக் காட்டினிலே...

முதன் முதலாக
மயிலாக நீ வந்து சேர்ந்தாய் !

முகாரியிலேயே
மூழ்கிப் போன
என் வாழ்க்கை வீணைக்கு...

முதன் முதலாக
மோகனத்தைப்பயிற்றுவிக்கும்
'வாணி'யாக நீ வந்தமர்ந்தாய்.

-யாழ் சுதாகர்

No comments: